Saturday 30 March 2013

கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் . தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

Wednesday 27 March 2013

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்
பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மறுபடியும் March மாசம் வந்தாச்சு, Appraisal, Rating, Band, Bucket, Dependancy, One on one meeting  பொடலங்கா, புண்ணாக்குன்னு மொத்த officeம் ரத்த பூமி ஆயிருக்கும். 

எப்படியும் நம்ம expect பன்ற Ratingக விட  கம்மியா தான் வரும். அந்த வெறுப்புல அப்படியே போய் மேனேஜர் கிட்ட discussion பண்ணிட்டு ரூம விட்டு வெளிய வந்த கையோட ஒரு employee எழுதுற கடிதம்....

'Certification முடிச்சியா?, Competency முடிச்சியா?, Companyக்குasset create பண்ணியா? Cross fuctional training attend பண்ணியா?? Training conduct பண்ணியா?? fun eventsல dance ஆடுனியா? கொஞ்சி விளையாடும் எங்கள் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயான்னு' கட்டபொம்மன் rangeக்கு கேக்கறீங்களே ஒரு நாளைக்கு 9 hours projectக்கு  வேல பாத்தனே , அது உங்க கண்ணுக்கு தெரியலையா?? 

Tuesday 26 March 2013

100 கிராம் இளநீரில் 250 மி.கி. பொட்டாசியம் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பொட்டாசியத்துக்கு உள்ளது. நரம்பியல் மண்டலத்தை அமைதிப்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ரத்தக் குழாய் பாதிப்புகளை பொட்டாசியம் தடுக்கிறது.

தினமும் ஓர் இளநீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவில் பொட்டாசியம் கிடைக்கும். முதியவர்கள் அதிக அளவில் பொட்டாசியம் கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வயது அதிகரிக்கும்போது நம்முடைய சிறுநீரகங்களின் பொட்டாசியத்தைப் பிரித்து வெளியேற்றும் திறன் குறைந்துவிடுகிறது. எனவே, முதியவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில் பொட்டாசியம் சத்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.

ஏழை அப்பன்கள்..!

இரண்டு நாட்களுக்கு முன் மாலை அலுவலகம் முடிந்து அயனாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். கெல்லீஸ் சிக்னலை தாண்டியதும் பாலம் ஏறி இறங்கினால் இடதுபக்கம் HBI கல்லூரி இருக்கிறது. அதன் நடைப்பாதையில் ஒரு சிறு கூட்டம். 

என்னவென்று எட்டிப்பார்த்தால் ஒரு பழைய சைக்கிளைப் பிடித்தவாரு எலும்பும் தோலுமாக 35 வயது மதிக்கத்தக்க லுங்கி கட்டிய நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சைக்கிள் கேரியரில் அவரது 4 வயது மகன் பெரும் குரலெடுத்து அழுதபடி அமர்ந்திருந்தான். கண்ணீர் வற்றாமல் வடிந்து கொண்டிருந்தது. அவனது குதிகாலின் பின்பகுதியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தோற்றத்திலேயே குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

``என்னாச்சு சார்..” என்றேன்.

``எனக்கு பின்னாடி வேகமா வந்த பைக்காரன் சைக்கிளை இடிக்கிற மாதிரி ஓவர் டேக் பண்ணான் சார். பையன் பயந்துபோய் காலை சைக்கிள் சக்கரத்துக்குள்ள விட்டுட்டான்..” என்றார் சோகமாக. பையனை பார்க்க பரிதாபமாக இருந்தது.

அந்த ரோட்டை ஒட்டியே கல்லூரியின் சிறிய மருத்துவமனை இருக்கிறது. ``சரி.. இந்த ஆஸ்பிட்டல்ல காட்டுங்க..” என்று கூறியவாரு வண்டியை நகர்த்தினேன்.

ஆனால் அவர் அதை காதில் வாங்காமல் பையனை பின்னாடி உட்கார வைத்தபடியே சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.

எனக்கு கொஞ்சம் கடுப்பாகிவிட்டது. ``சார்.. பையனுக்கு ரத்தம் வடியுது.. பக்கத்துலயே கிளீனிக் இருக்கு.. காட்டுங்கன்னா.. கண்டுக்காம போறீங்க..” என்று கோபத்தில் கொஞ்சம் சத்தமாக சொல்லி முடிக்கவில்லை... `` பணமில்ல சார்..” என்றார் பரிதாபமாக.

அப்படியொரு பதிலை நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.. அதைக் கேட்டதுமே எனக்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது.

அவரே தொடர்ந்து ``இங்க நெறைய காசு கேட்பாங்க.. அதான் வீட்ல போய் மஞ்சள் வச்சு கட்டு போடலாம்னு போறேன்..” என்று சொல்லியவாறு மீண்டும் சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.

அவரைப் பிடித்து நிறுத்தி சிறுவனைக் கிளீன்க்கிற்குள் கூட்டிப்போய்.. சிகிச்சை அளிக்க வைத்து அனுப்பினேன். சிறுவன் போகும்போது சிநேகமாய் ஒரு சிரிப்பு சிரித்தான்.

வீடு வந்து சேர்ந்த பின்னரும்... ``பணமில்ல சார்..” என்ற அவரின் வார்த்தையும் அந்த இயலாமை முகமும் தொந்தரவுப் பண்ணியபடியே இருந்தது. ஒரு கணம் அந்த ஏழை தந்தையாக நானும்.. ரத்தம் சொட்ட அமர்ந்திருந்த சிறுவனாக இளமாறனையும் நினைத்துப் பார்த்தேன்.. அந்த கற்பனையே பெரும் துன்பமாக இருந்தது.

அம்பானிகளும் டாடா பிர்லாக்களும் வாழும் இந்த புண்ணிய பூமியில்..
நீங்கள் கார்களிலும் பல்ஸர்களிலும் பறக்கும் இதே சாலைகளில்..
கையில் பணமில்லாமல் சைக்கிளில் குழந்தைகளுடன் எண்ணற்ற ஏழை அப்பன்களும், பயணிக்கிறார்கள் என்பதை மட்டும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.. அவர்களும் வாழ்ந்துவிட்டு போகட்டும்.. :(


Ref: Facebook.com