Monday 10 June 2013

மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய்க்கடி விசம் நீங்கத் தமிழ்ச்சித்தர் பெருமக்கள் அருளிய சித்தமருத்துவம்.

பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ மரணத்தை வாங்கித்தரும் பாம்பு, நாய் போன்ற நச்சு விசங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம். பொரும்பாலும் இந்த நச்சு விசங்கள் உயிருக்கே கேட்டைத் தந்து விடுவது உண்டு. பல எலி போன்ற விசங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும். எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே எந்த விசமனாலும் அவற்றை முறைப்படி நீக்கிக்கொள்ள வேண்டும் .

நாய்க்கடி

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும். (அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விசம் நீங்கும்.

சீத மண்டலி

சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும். உடலில் நடுக்கம் உண்டாகும். குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும். சிறிய நங்கை மூலிகைப் பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை, மாலை உண்டுவர விசம் முறியும் .

வண்டுகடி

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம், பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விசம் நீங்கும்.

செய்யான் விசம்

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விசம் நீங்கும். எட்டிக்கொட்டை எடுத்துப் பால் விட்டரைத்து அருந்த விசம் முறியும்.

பூரான்

இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும். பூரான்போல் தடிப்பு உண்டாகும். குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விசம் நீங்கும். சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம்.

விரியன் பாம்பு கடித்தால்

இதில் பல வகை உண்டு. கருவிரிய பாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும். கடுப்பு உண்டாகும். இதற்குப் பழைய வரகு அரிசி இருநூறு கிராம் கொண்டுவந்து, பிரய்மரப்பட்டை இருநூறு கிராம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விசம் நீங்கும் .

நல்ல பாம்பு கடித்தால்

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்கக் கக்கல்(வாந்தி) கழிச்சல் உண்டாகி விசம் வெளியேறும். தும்பைச் சாறு 25 மில்லி எடுத்து, மிளகு பத்து கிராம் அரைத்துக் கொடுக்க விசம் நீங்கும். வெள்ளருகு மென்று தின்ன விசம் முறியும் .

தேள் கடித்தால்

தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மில்லி அருந்த விசம் முறியும். நிலாவரைத் தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விசம் முறியும் .

எலிக்கடிகள்

அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விசம் முறியும். அவுரி மூலிகை பத்துக்கிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விசம் முறியும்.

மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )

சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விசம் நீங்கும். சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விசம் நீங்கும். சிரியா நங்கை அரைத்தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விசம் நீங்கும். பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விசம் நீங்கும்

இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துக்கொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம்.

சித்தமருத்துவம் காப்போம்!
நோய் வெல்வோம்!

0 comments:

Post a Comment